நாங்களும் ஒட்டுவோம்ல: திருச்சியில் காங்கிரஸுக்கு போட்டியாக போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்
திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டர்களுக்கு போட்டியாக அதிமுகவினரும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருந்தனர்.
திருச்சி நகரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். ராகுல் பேசுகையில் காற்று சுழற்றி சுழற்றி அடித்ததுடன் மழையும் கொட்டித் தீர்த்தது. இருப்பினும் ராகுல் குடை கூட பிடிக்காமல் நனைந்தபடியே பேசினார்.

ராகுல் தனது உரையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசை தாக்கிப் பேசினார். ராகுல் வருகையையொட்டி காங்கிரஸார் திருச்சி நகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். ராகுல் அதிமுக அரசை தாக்கிப் பேசுவார் என்பதை ஆளுங்கட்சியினர் எதிர்பார்த்திருப்பார்கள் போன்று.
அதிமுகவினர் காங்கிரஸாருக்கு போட்டியாக நகரின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவை புகழ்ந்தும், குலசாமி என்றும் கூறி அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். காங்கிரஸாரின் போஸ்டர்களுக்கு அருகில் தான் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
இந்த போஸ்டர் போட்டியால் திருச்சி நகரம் போஸ்டர் நகரமாக காணப்பட்டது. அதிமுக, காங்கிரஸ் கட்சியினரின் இந்த போஸ்டர் போரை பார்த்து போலீசார் தான் பதட்டம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications