மின் பற்றாக்குறை.. நீலகிரி டூ ஈரோடு .. சரியான நேரத்தில் பெரிய முடிவெடுத்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: தமிழகத்தில் வழக்கமாக மே மாதம் முடிந்தவுடன் மின் பற்றாக்குறை இருக்காது. ஆனால், கடந்த சில நாட்களாக மின் பற்றாக்குறை தொடர்கிறது. இன்னும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையவில்லை என்பதால், வெயில் மற்றும் புழுக்கம் அதிகமாக உள்ளது. அதனால் பகலில் கூட ஏசி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி தினமும் 150 முதல் 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து தேவையான இடங்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்படுகிறது.

Power Shortage

தமிழகத்தில் ஒரே மலை மாவட்டம் என்றால் அது நீலகிரி தான். இது முழுமையாகவே மலைப்பகுதியை கொண்ட மாவட்டமாக இருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் மாயார், பவானி ஆகிய 2 ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது.இந்த ஆறுதான் பவானியில் காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகிறது.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால், ஆண்டில் 94 நாட்கள் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டிற்கு சுமார் 1,250 மில்லி மீட்டர் மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகிறது. நீலகிரி மலை மாவட்டம் என்பதால் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. எப்போது மின்பற்றாக்குறை அதிகமாக உள்ளதோ அப்போது இங்கு மின் உற்பத்தி அதிகரிக்கப்படுவது வழக்கம்.

இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கமான நேரங்களில் தினமும் 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு 100 மெகாவாட் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரிட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின் தட்டுப்பாடு பிரச்சனை இல்லாத சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக நீலகிரியில் குந்தா நீர்மின் திட்டம் உட்பட பல்வேறு நீர் மின் திட்டங்கள் மூலம் 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை, நேரங்களில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை மட்டும் சமாளிக்க 200 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டும் வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மின் பற்றாக்குறை நிலவுகிறது இன்னும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையவில்லை என்பதால், வெயில் மற்றும் புழுக்கம் அதிகமாக உள்ளது. அதனால் பகலில் கூட ஏசி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி தினமும் 150 முதல் 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து தேவையான இடங்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கோடை மழை குறைவாக பெய்ததால், நீலகிரியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால், தண்ணீருக்கு பற்றாக்குறை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+