மின் பற்றாக்குறை.. நீலகிரி டூ ஈரோடு .. சரியான நேரத்தில் பெரிய முடிவெடுத்த தமிழக அரசு
ஊட்டி: தமிழகத்தில் வழக்கமாக மே மாதம் முடிந்தவுடன் மின் பற்றாக்குறை இருக்காது. ஆனால், கடந்த சில நாட்களாக மின் பற்றாக்குறை தொடர்கிறது. இன்னும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையவில்லை என்பதால், வெயில் மற்றும் புழுக்கம் அதிகமாக உள்ளது. அதனால் பகலில் கூட ஏசி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி தினமும் 150 முதல் 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து தேவையான இடங்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஒரே மலை மாவட்டம் என்றால் அது நீலகிரி தான். இது முழுமையாகவே மலைப்பகுதியை கொண்ட மாவட்டமாக இருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் மாயார், பவானி ஆகிய 2 ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது.இந்த ஆறுதான் பவானியில் காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகிறது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால், ஆண்டில் 94 நாட்கள் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டிற்கு சுமார் 1,250 மில்லி மீட்டர் மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகிறது. நீலகிரி மலை மாவட்டம் என்பதால் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. எப்போது மின்பற்றாக்குறை அதிகமாக உள்ளதோ அப்போது இங்கு மின் உற்பத்தி அதிகரிக்கப்படுவது வழக்கம்.
இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கமான நேரங்களில் தினமும் 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு 100 மெகாவாட் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரிட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின் தட்டுப்பாடு பிரச்சனை இல்லாத சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக நீலகிரியில் குந்தா நீர்மின் திட்டம் உட்பட பல்வேறு நீர் மின் திட்டங்கள் மூலம் 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை, நேரங்களில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை மட்டும் சமாளிக்க 200 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டும் வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மின் பற்றாக்குறை நிலவுகிறது இன்னும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையவில்லை என்பதால், வெயில் மற்றும் புழுக்கம் அதிகமாக உள்ளது. அதனால் பகலில் கூட ஏசி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி தினமும் 150 முதல் 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து தேவையான இடங்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கோடை மழை குறைவாக பெய்ததால், நீலகிரியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால், தண்ணீருக்கு பற்றாக்குறை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
-
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன














Click it and Unblock the Notifications