ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமையாம்!- இது மத்திய அமைச்சர்
கோவை: ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குதான் பெருமை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி கோவை வருகிறார். அன்று அவர் கோவை சிங்காநல்லூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் கோவை கொடிசியாவில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

விழா ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
ரஜினி சிறந்த நடிகர். தலைமுறை தலைமுறையாக அவரது நடிப்பை மக்கள் ரசித்து வருகிறார்கள்.
வருங்கால சந்ததியினரும் அவரது நடிப்பை ரசிக்கிறார்கள். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் ஆவார். அவருக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை," என்றார்.












Click it and Unblock the Notifications