காஞ்சிபுரம் அருகே கோர விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்...!
காஞ்சிபுரம் அருகே அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிரபுரம் அருகே மினி வேனும் தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கோழிப்பண்ணையில் பாஸ்கர், ஆசிப், ஹுசைன் ஆகிய 3 பேர் பணி புரிந்து வந்தனர். நேற்றிரவு வழக்கம் போல் பணியை முடித்து விட்டு 3 பேரும் மினி வேனில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ராஜகுளம் அருகே தனியார் நிறுவன பேருந்து ஒன்று ஊழியர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி வேன் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் மினிவேண் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் மினிவேனில் பயணம் செய்த பாஸ்கர், ஆசிப், ஹுசைன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மினி வேனை ஓட்டிச்சென்ற பாஸ்கர் அதிவேகமாக சென்றதோடு முன்னாள் சென்ற வாகனத்தையும் முந்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications