தஞ்சையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
தஞ்சை: தஞ்சையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை சோழன் நகரில் ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதையடுத்து இது குறித்து உடனே விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. தெற்கு போலீஸ் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புகாருக்கு உள்ளான அந்த வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதில் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த சித்ரா (26), லாவண்யா (30), தேவகோட்டையை சேர்ந்த ராணி (33) ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அன்வர் (57) மற்றும் அவரது மனைவி ஆயிஷா (50) ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications