புதுச்சேரியில் ஆந்திரா அரசு பேருந்துக்கு தீ வைப்பு!
புதுச்சேரி: புதுவையில் அரசுப் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைத்திருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திரமாநிலத்திலிருந்து புதுவைக்கு வந்த அம்மாநில பேருந்துகள் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே புதுவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில், புதுவை-திருப்பதி செல்லும் ஆந்திர மாநில பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மர்ம நபர்கள் நேற்று இரவு இந்த பேருந்தின் உள்ளே ஜன்னல் கதவைத் திறந்து தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். திடீரென பேருந்தின் உள்ளே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பேருந்தின் இருக்கைகள் தீயில் கருகி சேதமடைந்து போனது. உடனே தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து புதுவை உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications