காவிரி விவகாரம்: புதுச்சேரியிலும் போராட்டம் விஸ்வரூபம் கர்நாடகா வங்கி முற்றுகை!
புதுச்சேரி: காவிரியில் உரிய நீரை திறந்துவிடாத கர்நாடகா அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. புதுச்சேரியில் கர்நாடகா அரசு வங்கியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்தது கர்நாடகா. ஆனால் கர்நாடகாவின் இந்த செயலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கர்நாடகாவுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. சென்னை, ராமேஸ்வரம், கோவை, சீர்காழியில் கர்நாடகாவுக்கு எதிராக போராட்டங்களும் கர்நாடகா வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் கர்நாடகாவுக்கு எதிராக புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்துள்ளது.

புதுவையில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதேபோல் பல தமிழ் அமைப்புகளும் கர்நாடகா வங்கியை முற்றுகையிட முயன்றனர். அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications