மக்களை மிரட்டும் சுங்கச்சாவடிகள்.. சாட்டையை சுழற்றும் நீதிபதிகள்!
மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகள் மீது நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகள் மீது நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்புக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளும் அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் முடிந்தும் எந்த கணக்குவழக்கும் இன்றி குருட்டான் போக்கில் சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
காரணம் கேட்கும் மக்களுக்கும் முறையாக விளக்கமளிக்காமல் பல சுங்கச்சாவடிகள் வன்முறையை கையிலெடுத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. மதுரை, திருச்சி என எங்கு சென்றாலும் ஒரு பெரும் தொகையை பயணத்தின்போதே சுங்கச்சாவடிகளுக்கு என எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கட்டணம்
இந்த கட்டண கொள்ளைக்கு எதிராக பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பலமுறை போராட்டம் நடத்தியும் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாறாக சுங்கக்கட்டணம் மட்டுமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தெனாவட்டாக வேலை பார்க்கும் ஊழியர்கள்
பல நேரங்களில் தெனாவட்டாக வேலை பார்க்கும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் ஆம்புலன்களை கூட கண்டுகொள்வதில்லை. ஊழியர்களின் அலட்சியத்தால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில சமயங்களில் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் தகராறு
சுங்கச்சாவடிகளில் காக்க வைக்கப்படுவதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஒப்பந்தம் முடிந்தும் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடிகளால் பல இடங்களில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சவுக்கடி கொடுத்த நீதிபதிகள்
இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் தான் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர். சமூக விரோதிகள் மூலமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சவுக்கடி கொடுத்துள்ளனர்.

தீர்வு கிடைக்குமா?
நீதிபதிகள் சாட்டையை சுழற்றியுள்ளதால் இனியாவது வீதி மீறலில் ஈடுபடும் சுங்கச்சாவடிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? சுங்கச்சாவடிகள் பொறுப்புணர்ந்து செயல்படுமா? கட்டண கொள்ளைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications