மக்களை மிரட்டும் சுங்கச்சாவடிகள்.. சாட்டையை சுழற்றும் நீதிபதிகள்!
மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகள் மீது நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகள் மீது நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்புக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளும் அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் முடிந்தும் எந்த கணக்குவழக்கும் இன்றி குருட்டான் போக்கில் சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
காரணம் கேட்கும் மக்களுக்கும் முறையாக விளக்கமளிக்காமல் பல சுங்கச்சாவடிகள் வன்முறையை கையிலெடுத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. மதுரை, திருச்சி என எங்கு சென்றாலும் ஒரு பெரும் தொகையை பயணத்தின்போதே சுங்கச்சாவடிகளுக்கு என எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கட்டணம்
இந்த கட்டண கொள்ளைக்கு எதிராக பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பலமுறை போராட்டம் நடத்தியும் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாறாக சுங்கக்கட்டணம் மட்டுமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தெனாவட்டாக வேலை பார்க்கும் ஊழியர்கள்
பல நேரங்களில் தெனாவட்டாக வேலை பார்க்கும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் ஆம்புலன்களை கூட கண்டுகொள்வதில்லை. ஊழியர்களின் அலட்சியத்தால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில சமயங்களில் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் தகராறு
சுங்கச்சாவடிகளில் காக்க வைக்கப்படுவதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஒப்பந்தம் முடிந்தும் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடிகளால் பல இடங்களில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சவுக்கடி கொடுத்த நீதிபதிகள்
இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் தான் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர். சமூக விரோதிகள் மூலமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சவுக்கடி கொடுத்துள்ளனர்.

தீர்வு கிடைக்குமா?
நீதிபதிகள் சாட்டையை சுழற்றியுள்ளதால் இனியாவது வீதி மீறலில் ஈடுபடும் சுங்கச்சாவடிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? சுங்கச்சாவடிகள் பொறுப்புணர்ந்து செயல்படுமா? கட்டண கொள்ளைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications