புண்ணாக்கு கடைன்னு சொல்லி டாஸ்மாக் திறந்த பலே அதிகாரிகள்... தாலியை கழற்றி போராடிய பெண்கள்
பல்லடம் அருகே புண்ணாக்கு கடை என்று கூறி அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : பருத்திக்கொட்டை மற்றும் புண்ணாக்கு கடை அமைப்பதாகக் கூறி விட்டு டாஸ்மாக் கடை அமைத்த அதிகாரிகளைக் கண்டித்து பல்லடம் அருகே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி அதிகாரிகளிடம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அவரப்பாளையம் பகுதியில் நேற்று புதிதாக "டாஸ்மாக்' கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பூர் நகருக்கு சென்றுவிட்டு இரவு பத்து மணிவரை பெண்கள் இங்கே வந்து போய் கொண்டிருக்கின்றனர். 20 கிராமப் பகுதி மக்கள் பயன்படுத்தும் பிரதான வழியில் மதுக்கடை திறந்துள்ளதால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியரிடம் மனு
சாலையோரம், விவசாய நிலத்தில் மதுக்கடை அமைத்துள்ளது சட்டத்தை மீறும் செயல் என்றும். இப்பகுதியில் மதுக்கடை வேண்டாம் என, ஏற்கனவே போராட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

ஏமாற்றிய அதிகாரிகள்
இந்த கடையை சில வெளியூர் ஆட்கள் வந்து பார்த்துவிட்டு சென்றதை அறிந்து அதிகாரிகளிடம் விசாரித்த போது இந்த இடத்தில் பருத்திக்கொட்டை மற்றும் புண்ணாக்கு கடை அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது இதை டாஸ்மாக்காக மாற்றியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக கிராம வாசிகள் குற்றஞ்சாட்டினர்.

பெண்கள் ஆவேசம்
பொதுமக்களின் போராட்டம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டாஸ்மாக் அதிகாரிகளை நிகழ்விடத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர். ஆனால் டாஸ்மாக் அதிகாரிகள் வரத் தாமதமானதால் மதுக்கடையை மூடாமல் செல்ல மாட்டோம் என்று பெண்கள் ஆவேசமடைந்தனர்.

மஞ்சள் கயிறை வீசி போராட்டம்
எங்களுக்கு தாலிக்கு தங்கம் தேவையில்லை; தாலி எங்களது கழுத்தில் நிரந்தரமாக இருக்க வழி செய்யுங்கள் என்று கூறிய பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மஞ்சள் கயிறுகளை, கழுத்தில் இருந்து கழற்றி ரோட்டில் வீசி எறிந்து அரசுக்கும், மதுவுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.

கைவிரிப்பு, தொடர் போராட்டம்
நீண்ட நேரத்திற்குப் பின்னர் போராட்ட இடத்திற்கு வந்த டாஸ்மாக் மேலாளர் சட்ட விதிகளின்படியே டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மடும் அதிகாரம் ஆட்சியருக்கே உண்டு என்றும் கூறினார். இதனையடுத்து எந்த அதிகாரியையும் நாங்கள் சந்திக்க மாட்டோம், அவர்கள் எங்களை சந்திக்கட்டும் அதுவரை டாஸ்மாக்கை திறக்க முடியாது என்று கூறி பெண்களும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications