பயிற்சி டிரைவர்களால் இயக்கப்படும் பேருந்துகள்... பீதியோடு பயணிக்கும் மக்கள்!
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல இடங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கி வருகின்றனர். இதனால் பத்திரமாக போய்ச் சேருவோமா என்ற அச்சத்தில் பயணிகள் ஆழ்ந்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நேற்று முதல் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் பேருந்துகளுக்கு மாற்றாக மக்கள் ரயிலைப் பயன்படுத்தும் வசதி உள்ளது. ஆனால், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் ஓடாததால் மக்கள், கிடைக்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களைப் பயணத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
மொத்த பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவையும் பெரும்பாலும் பயிற்சி மற்றும் மாற்று ஓட்டுநர்களால் இயக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டு இதேபோல் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் போது அனுபவம் இல்லாத ஓட்டுநர்களால் 28 பேர் பலியானார்கள். அதனைத் தற்போது நினைவு கூறும் மக்கள், ‘தற்போதைய சூழலில் பேருந்துகளில் பயணம் செய்ய பயமாகவும் இருக்கிறது, ஆனால் வேறு வழியும் இல்லை' என கலக்கத்துடன் கூறுகின்றனர்.
நன்கு பழக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கே இந்த குண்டும் குழியுமான சாலைகளில் விபத்து ஏற்படும் போது, பயிற்சி ஓட்டுநர்கள் எப்படி இதை சமாளிப்பார்கள் என அவர்கள் கவலையுடன் பேசிக் கொள்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications