செல்லாத ரூபாய் பிரச்சனை... பொங்கிய மக்கள்.. ரிசர்வ் வங்கியில் ஆவேச முற்றுகை
சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாறித்தர வேண்டும் எனக்கூறி அவர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் இன்று திடீரென முற்றுகையிட்டனர். என்.ஆர்.ஐக்கள் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.

மோடியின் இந்த ரூபாய் நோட்டு மதிப்பு ரத்து நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் அன்றாட செலவுக்கே பணமின்றி தவித்தனர். மோடியின் அறிவிப்பு வந்து 2 மாதங்கள் ஆகியும் மக்களின் பணப்பிரச்சனை இன்னும் தீர்ந்தப்பாடில்லை.
பழைய நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான தேதியை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்தது.
இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்கியில் என்.ஆர்.ஐக்கள் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தங்களின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி வங்கியை முற்றுகையிட்டனர்.
மத்திய அரசு அறிவித்தபடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications