காவிரி வாரியம் அமைக்காமல் நீதிமன்ற அவமதிப்பு... மத்திய அரசு மீது புதுச்சேரி கொறடா வழக்கு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது புதுச்சேரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
புதுச்சேரி : உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி கொறடா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீர் பல ஆண்டுகளாகவே அரசியல் காரணங்களால் மறுக்கப்பட்டு வருகிறது. காவிரி நீரால் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பயனடைகின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த காரைக்கால் காவிரியின் கடைமடை பகுதி.

கர்நாடகா தரவேண்டிய நீரை தமிழகத்திற்கு தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்றே தருவதால் கடைமடை வரை காவிரி நீர் போவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு 7 டிஎம்சி நீர் ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதனையடுத்து மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு செய்தது.ஆனால் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடை போட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கிரண்பேடி நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்ததன் பேரில், புதுச்சேரி கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குடனே சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படலாம்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications