மக்கள் எதையும் உண்ணக் கூடாது என்ற கோமாளித்தனத்தையும் மத்திய அரசு செய்யும்.. நாராயணசாமி பொளேர்
சென்னை: நாட்டு மக்கள் எதையும் உண்ணக் கூடாது என்ற கோமாளித்தனத்தையும் மத்திய அரசு விரைவில் அரங்கேற்றும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இதில் முதன்மை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை அளித்து பேசினார்.

அப்போது புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், காஷ்மீரும், கன்னியாகுமரியும் சங்கமித்திருக்கும் விழாவாக இது கருதப்படுகிறது. உலகிலேயே சட்டசபையில் 14 முறை வெற்றி பெற்ற ஒரே தலைவர் கருணாநிதி. அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பார்.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியது போல் கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மதவாத சக்திகளை ஒடுக்க மதசார்பற்ற கட்சிகள் இந்த மேடையில் திரண்டுள்ளன.
இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் மதசார்பற்ற கட்சிகளும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கட்சிகளும் ஒன்றிணையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தமிழகத்தில் நடப்பது பொம்மை ஆட்சி, டெல்லியில் பாஜக தலைவர்கள் ரிமோட் கன்ட்ரோல் வைத்து தமிழகத்தை இயக்குகின்றனர். ரிமோட்டை அழுத்தி நில் என்றால் நிற்கிறார்கள், உட்கார் என்றால் உட்காருகிறார்கள்.
டெல்லியில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. மதத்தை கடைபிடிப்பது தனிமனித சுதந்திரம். அதை தடுக்கவோ, மறுக்கவோ எந்த சக்திக்கும் இடமில்லை. மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளார்கள். இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஆட்டிறைச்சி, மீன் இறைச்சிகளை உண்ணக் கூடாது என்பார்கள்.
பின்னர் மக்கள் காய்கறிகளையும் உண்ணக் கூடாது என்றும் எதையும் உண்ணக் கூடாது என்றும் கோமாளித்தனத்தை மத்திய அரசு அரங்கேற்றும். இவற்றை ஒடுக்க சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும். போராளித்தனமான குணத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications