புதுச்சேரியில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா
புதுச்சேரி: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37ல் அதிமுக அமோக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து தோல்வி குறித்து ஆலோசிக்க புதுச்சேரியில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதன் காரணாக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தலைமை அறிவிக்குமா அல்லது இவர்களையே மீண்டும் அந்த பொறுப்பில் அமர்த்துமா என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.