ஆளுநரை அதிகாரிகள் நேரடியாக சந்திக்க தடை- புதுவை சட்டசபையில் நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் முற்றியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் கருத்து மோதல்கள் முற்றியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுவை மாநிலத்திற்கு வந்தது முதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
புதுச்சேரிக்கு யார் முதல்வர் என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு கிரண்பேடி அதிரடிகள் காட்டுவதில் அம்மாநில அரசியல் வாதிகள் அதிர்ந்து போயுள்ளனர். இதை அவ்வப்போது ஆளும் கட்சியினர் வெளிப்படுத்தினாலும் கிரண் பேடியின் அதிரடி நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 'தான் ஒரு துணை நிலை ஆளுநர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து கிரண்பேடி செயல்படுகிறார்' என்று ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரம் தேடுகிறார்
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி," துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் மீது உண்மையான அக்கறையில்லை. வெற்று விளம்பரத்துக்காக கிரண் பேடி செயல்பட்டு வருகிறார். கிரண்பேடியின் செயல்பாடுகள் துணை நிலை ஆளுநர் பதவிக்குத் தகுதியில்லாதவர் போல நடந்துகொள்கிறார்.
புதுவையின் எந்த அரசு அதிகாரிகளும் அமைச்சர்களின் அனுமதியின்றி துணை நிலை ஆளுநரை நேரில் சந்திக்க கூடாது. அப்படி சந்தித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அதிகாரிகளையும், மக்கள் தேர்ந்தெடுத்த சட்டசபை உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று கூறியுள்ளார் கிரண்பேடி. இப்படிப்பட்ட ஆளுநர் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையா" என்று கூறியுள்ளார் முதல்வர்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடிவு
இந்த நிலையில் புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏஎ. அன்பழகன், " மத்திய அரசு உடனடியாக துணை நிலை ஆளுநரை திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications