ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள்!
புதுக்கோடை மன்னர் அரசு கல்லூரி மாணவர்கள், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி வாசலில் அமர்ந்து போராடி வருகின்றனர்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் 20ஆவது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை அரசு கலூரி மாணவர்களும் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்ப்ன திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பொதுமக்கள், விவசாயிகள், பல்வேறு மைப்பச் சேர்ந்தவர்கள் 20ஆவது நாட்களாக தொடந்ர்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நங்கு நல்ல மழைப் பெய்த போதிலும் மழைக்குக் கூட ஒதுங்காமல் போராடி வந்தனர். இந்நிலையில், நெடுவாசலுக்கு அருகே வடகாடு ஊர் மக்களும் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.
தற்போது நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரி மாணவர்களும் கல்லூரி வாசலில் அமர்ந்து போரட்டம் நடத்திவருகின்றனர்.
ஆனால், 20 நாட்கள் போராட்டம் நடைபெற்றாலும் மக்கள் மத்திய, மாநில அரசு, போராட்டத்தை மக்கள் கைவிட எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications