For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தம்மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி மனு

தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

Pugazhendi has filed a petition to cancel the national treason case against him

இதுதொடர்பாக இந்திய இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட 36 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதால் அவர் எந்நேரத்திலும் கைதாகலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தம்மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். புகழேந்தியின் மனு வரும் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

English summary
Dinakaran's supporter Pugazhendi has filed a petition to cancel the national treason case against him. The petition comes up for hearing in the Chennai High Court on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X