வாட்ஸ் ஆப்பில் வினாத்தாள் அனுப்பிய வழக்கு: 4 ஆசிரியர்களுக்கு 2 நாள் போலீஸ் காவல்
ஓசூர்: ஓசூர் பள்ளி ஒன்றில் கணக்கு தேர்வு வினாத்தாளை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 கணித தேர்வு நடந்து கொண்டிருந்தபோது வினாத்தாளை போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய வழக்கில் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயக் குமார், கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வினாத்தாள் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகந்தன்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி குற்றப்பிரிவு போலீசார் ஓசூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், 4 ஆசிரியர்களையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஆசிரியர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், தங்கள் பள்ளிகளின் மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கவும், பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications