கனிமொழி, தயாளு அம்மாள், ராசா விடுதலை - ராகுல், தினகரன், வைகோ வாழ்த்து
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி,தயாளு அம்மாள், அ.ராஜாவிற்கு ராகுல்காந்தியும், வாழ்த்து கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
Recommended Video

சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இருந்து கனிமொழி, அ.ராஜா, தயாளு அம்மாள் விடுதலை பெற்றுள்ளதற்கு ராகுல்காந்தி வாழ்த்து கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார். பதவிக்காலத்தில் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை வைத்து கடந்த 7 ஆண்டுகளாக அரசியல் நடந்து வருகிறது
வழக்கின் இறுதிக் கட்ட வாதம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதன்பிறகு தீர்ப்பு தேதி பலகட்டங்களாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஷைனி, குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் 14 பேரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.

வழிகாட்டும் தீர்ப்பு
அனைத்து இழப்புகளையும் சரிசெய்யும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். சிபிஐ நேர்மையாக நடக்க வேண்டும் என வழிகாட்டும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

கனிமொழிக்கு வாழ்த்து
2 ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து கூறியுள்ளார். நீதி வென்றுள்ளது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கரை நீங்கியது
2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் 6 ஆண்டாக நடந்து வந்த வழக்கில் திமுக மீதான கரையை நீக்கியது நீதிமன்றம் என்று வைகோ கூறியுள்ளார்.

வாழ்த்து சொன்ன தினகரன்
கனிமொழியின் விடுதலைக்கு டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். 2 ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலையடைந்தது மகிழ்ச்சி. ராஜா, கனிமொழி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. விடுதலையானதற்கு மகிழ்ச்சி. தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆட்சியை இழந்த திமுக
இந்த ஊழல் குற்றச்சாட்டால் தமிழ்நாட்டில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்தது. இதுவரையில் இந்த பாதிப்பிலிருந்து இவ்விரு கட்சிகளும் மீளவே இல்லை. இந்த தீர்ப்பின் மூலம் திமுகவின் மீதான களங்கம் துடைக்கப்பட்டுள்ளதாக திமுக கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications