For Daily Alerts
Just In
சென்னை போரூர்,வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இடியுடன் மழை!
சென்னை போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடியுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை: போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடியுடன் மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை வெளுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை போரூர், வளசரவாக்கம், மணப்பாக்கம் மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்
கூறியுள்ளது.
English summary
Rain in Chennai valasarawakkam and porur.Chennai Meteorological center says that rain will continue in Tamil Nadu and Chennai will be cloudy and some places will get rain.
Story first published: Wednesday, October 4, 2017, 17:06 [IST]