சசிகலா நடராஜனுக்கு எதிராக பேசாம இருக்க முடியாது- ராஜாத்தி அம்மாள் தரப்பிடம் சசிகலா புஷ்பா அடம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவுக்கு காரணமே சசிகலா நடராஜன்தான் என தாம் குற்றம் சாட்டாமல் அமைதி காக்க முடியாது என திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தரப்பிடம் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்க ராஜாத்தி அம்மாள் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சசிகலா நடராஜனுடன் 45 நிமிடம் பேசினார்.

சசிகலா நடராஜன்- ராஜாத்தி அம்மாள்
இப்பேச்சுகளின் போது ஜெயலலிதா உடல்நலம் குறித்து சசிகலா புஷ்பா தம் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த உதவுமாறு ராஜாத்தி அம்மாளிடம் சசிகலா நடராஜன் கேட்டிருக்கிறார். தம்முடைய சமூகத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்த தாம் உதவுவதாக ராஜாத்தி அம்மாளும் வாக்குறுதி அளித்திருந்தார்.

டெல்லியில் பேச்சுவார்த்தை
இதையடுத்து ராஜாத்தி அம்மாளின் உதவியாளர் ஒருவர் டெல்லியில் சசிகலா புஷ்பாவை சந்தித்து பேசியிருக்கிறார். ஆனால் சசிகலா புஷ்பாவோ சசிகலா நடராஜன் மீதான தம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக அமைச்சர்களே ஆதரவு தெரிவிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

ஜெ. பாராட்டுவார்
அத்துடன் ஜெயலலிதா உடல்நிலை குறித்த அமைச்சர்களின் கருத்தே வேறாக உள்ளது. நிச்சயமாக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வந்து என்னுடைய குற்றச்சாட்டை நியாயப்படுத்தும்விதமாக பாராட்டு தெரிவிப்பார் எனக் கூறியுள்ளார்.

உதவ முடியவில்லையே
மேலும் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த கனிமொழி குடும்பத்துக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்... ஆனால் இந்த விவகாரத்தில் என்னால் உதவ முடியாது என கறாராக பேசியிருக்கிறார். இது ராஜாத்தி அம்மாள் மூலம் சசிகலா நடராஜனுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்தே சசிகலா புஷ்பாவின் பாதுகாப்புக்கு வந்த ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications