For Daily Alerts
Just In
மாயமான மலேசிய விமானம் குறித்து குமுதம் இதழில் ராஜேஷ் குமாரின் புதிய தொடர்
சென்னை: கிரைம் ஸ்டார் ராஜேஷ் குமாரின் புதிய தொடர் குமுதம் வார இதழில் வெளியாக உள்ளது.
குமுதம் வார இதழில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் இதுவரை 15க்கும் மேற்பட்ட தொடர்கதைகளை எழுதியுள்ளார். இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குமுதம் இதழில் அவர் புதிதாக ஒரு தொடரை எழுத உள்ளார்.
இந்த தொடர் கதையின் தலைப்பு "வெல்வெட் குற்றங்கள்". கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு 300க்கும் மேற்பட்ட பயணிகளோடு புறப்பட்ட மலேசிய விமானத்தின் கதி என்னவாயிற்று என்பது தான் இந்த தொடரின் கதை.
தனது கிரைம் மூளையை கசக்கி பிளிந்து அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு சரியான யூகத்தை கதையின் கருவாக பதிவு செய்ய உள்ளாராம்.
இனி கிரைம் நாவல் படிப்பவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
English summary
Writer Rajesh Kumar is going to write a story about missing Malaysian airlines in Kumudham magazine.
Story first published: Friday, May 30, 2014, 13:28 [IST]