இன்று செய்தியாளர்களுடன் ரஜினியின் சந்திப்பு எதுவுமில்லை!
நடிகர் ரஜினி காந்த் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினி காந்த் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அப்படியெல்லாம் அவர் சந்திக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ரசிகர்களை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் போர் வரும் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதிலிருந்து அவரது அரசியல் பிரவேசம் உறுதியானது. இந்நிலையில் தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கருத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஜினி வரும் ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் அறிவித்திருந்த நிலையில் அவர் பல்டி அடித்தார். இந்த நிலையில் ரஜினி காந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: Rajinikanth's PRO denies reports of any presser called by the Superstar
— Arvind Gunasekar (@arvindgunasekar) May 27, 2017
இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரப்பப்பட்டதால் எங்கே அவர் கட்சி தொடங்கப் போகும் செய்தியை வெளியிடப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அப்படியெல்லாம் எந்த சந்திப்புக்கும் திட்டம் இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications