இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.. ஆன்மீக பயணம் சிறப்பாக இருந்ததாக பேட்டி
Recommended Video

சென்னை: ஆன்மீக பயணத்தை நிறைவு செய்துவிட்டு, இமயமலையில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆன்மீகத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த 10ம் தேதி ஆன்மீக யாத்திரையாக இமயமலை புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி லதாவும் சென்றார். பெண்கள் பாதுகாப்பு குறித்த நிருபர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் அவர் கிளம்பி சென்றது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்த நிலையில், முதலில் இமாசலப்பிரதேசம் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள சாமியாரை சந்தித்தார். பின்னர் ரிஷிகேஷ் சென்று தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் சாமியாரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த், இமயமலை சென்று அங்குள்ள பாபா குகையில் தியானம் செய்தார்.
பின்னர், அங்குள்ள பிரசித்திபெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டார். இதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு அவர் டெல்லியில், கிளம்பி மதியம் சுமார் 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த, ரஜினிகாந்த், ஆன்மிக பயணம் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். 15 நாட்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்வார் என கூறப்பட்ட நிலையில், 10 நாட்களில் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்த ரஜினிகாந்த், தனது ஆன்மீக பயணத்தின்போது, அரசியல் வெற்றிக்காக கோயில்களில் வழிபாடு நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இனிமேல் அரசியல் காய் நகர்த்தல்கள் வேகம் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் உள்ளது.












Click it and Unblock the Notifications