நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. நிரூபித்த ரஜினி
நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்ற ரஜினி பட வசனம் இன்று நிரூபணம் ஆயிற்று.
சென்னை: நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்ற ரஜினி பட வசனம் இன்று அவரது அறிவிப்பு மூலம் பொருத்தமாயிற்று.
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், அவருக்கு ஒத்து வராது. அவர் கோழை என்றெல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. தமிழர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றெல்லாம் புதிய விதிகளை வகுத்தனர்.
இன்னும் சிலர் இது வழக்கம் போல் படத்தை பிரமோஷன் செய்வதற்காக ரஜினி இப்படி ஸ்டென்ட் அடிக்கிறார் என்றார்கள். ரஜினி தமிழகத்துக்கு என்ன செய்தார் என்ற கேள்விகளும் ரவுண்ட் கட்டின.

ரசிகர்கள் மத்தியில் பேச்சு
ரஜினி இரண்டாவது முறையாக ரசிகர்களை சந்தித்தார். அப்போது முதல் நாளான 26-ஆம் தேதி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி அறிவிப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து இன்று ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

தனிக் கட்சி
ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில், அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்று ரஜினி அறிவித்தார். மேலும் நாட்டில் சிஸ்டம் கெட்டு போய்விட்டது. நம்மை பார்த்து மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

நல்ல முடிவு
68 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்து ரஜினி என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. காலம் கடந்து எடுக்கப்பட்டாலும் இன்று எடுக்கப்பட்டது நல்ல முடிவாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.

ரஜினி பஞ்ச்கள்
ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக்குகள் மிகவும் பிரபலம். அந்த வகையில் முத்து படத்தில் வரும் பிரபல வசனமான நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்பார். அதுபோல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்கிற பஞ்ச்சும் ரஜினிக்கு பொருத்தமானதாகவே உள்ளது.
-
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்?












Click it and Unblock the Notifications