காலா பஞ்சாயத்து.. பெங்களூர் விரைந்தார் ரஜினி.. மக்களே முடிவு எடுக்கலாம் என பேச்சு!
கர்நாடகத்தில் காலா படம் ரிலீஸ் ஆவது குறித்து மக்களே முடிவு எடுக்கலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: கர்நாடகத்தில் காலா படம் ரிலீஸ் ஆக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினி நடிப்பில் வரும் 7-ஆம் தேதி காலா திரைப்படம் வெளியாகிறது. காவிரி விவகாரத்தில் ரஜினி கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இதை மனதில் வைத்து கொண்டு ரஜினியின் காலா படம் வெளியானால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி அப்படத்தை திரையிட விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதனிடையே ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காலா படத்தை திரையிடுவது தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் ரஜினி பேசுகையில், காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும் என்றார்.