அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது - ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்
மழை வெள்ள பாதிப்புக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டறிந்தார்.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முழு வீச்சில் செய்து வருவதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கூறியுள்ளார்.
வர்தா புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. சேதமடைந்த பகுதிகளில் மீட்பு மற்றும் உதவி பணிகளில் ராணுவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படகு மற்றும் உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்தநிலையில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
வர்தா புயல் பாதிக்கப்பட்ட சென்னைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருததாக முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சரிடம் விளக்கம் அளித்துள்ளார்.