பார் உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதா? ராமதாஸ் கேள்வி...
சென்னை : 'பார் உரிமையாளர்கள் சார்பில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆஜராகி வாதிட்டது தவறு' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதன் மூலம் 50 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட மரபு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

கேரளாவில், பார்கள் மூடப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பார் உரிமையாளர் சார்பில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிட்டது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய தலைமை வழக்கறிஞராக இருக்கும் ஒருவர், பார் உரிமையாளர்களுக்காக வாதிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசிலோ, மாநில அரசிலோ, தலைமை வழக்கறிஞராக இருப்பவர்கள், தனிநபர்களுக்காக வாதிடுவதற்கு, சட்டப்படி தடையில்லை.
ஆனால், அவ்வாறு வாதிடுவது, தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அரசு வழக்கறிஞர் தனிநபர்களுக்காக ஆஜராவதில்லை என்ற மரபு, 50 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010 ல், கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற, லாட்டரி ஊழல் வழக்கின் விசாரணைக்காக குற்றம் சாற்றப்பட்டவர் சார்பில், அப்போதைய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
அதற்கு கேரள அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி, இதில் தலையிட்டு, 'அந்த வழக்கில், ராமன் ஆஜராக மாட்டார்' என, அறிவித்தார்; அதனால், சர்ச்சை முடிவுக்கு வந்தது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருக்கும் முகுல் ரோஹத்கிக்கு, இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டிய இடத்தில் உள்ள அவர், எப்படி பொதுநலனுக்கு எதிராக ஆஜராகி வாதிட்டார் என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு, தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications