தமிழகத்தின் மானம் இந்த அளவுக்கா காற்றில் பறக்கிறது?: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தின் மானம் இந்த அளவுக்கா காற்றில் பறக்கிறது? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இப்போது கோமாளிகளின் ஆட்சி நடக்கிறது என்று கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்துள்ளார். இது குறித்தும், நாட்டு நடப்பு குறித்தும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
மானம்
தமிழகத்தில் இப்போது கோமாளிகளின் ஆட்சி நடக்கிறது: கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க்- தமிழகத்தின் மானம் இந்த அளவுக்கா காற்றில் பறக்கிறது?
|
கருப்பு பணம்
மதிப்பிழக்க வைக்கப்பட்ட ரூ.1000 தாள்களில் 99% திரும்பி வந்தன: ரிசர்வ் வங்கி - அப்படியானால் கருப்புப் பணம் எங்கே போனது?
|
சிந்து
உலக இறகு பந்தாட்ட வாகையர் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த சாதனை மகள் சிந்துவுக்கு வாழ்த்துக்கள்! சாதனை தொடரட்டும்!
|
காட்சி
இன்னும் என்னென்ன காட்சியெல்லாம்
காணபோகிறோமோ ஐயா என ராமதாஸின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.