திமுக மது ஆலைகளை நீங்கள் என்ன மூடுவது கனிமொழி, நாங்களே மூடிவிடுவோம்: ராமதாஸ்
சென்னை: மதுவிலக்கு அமலுக்கு வந்தால் திமுகவினரின் மது ஆலைகள் மூடப்படும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். அதற்கு, திமுகவினரின் ஆலைகளை நாங்களே மூடிவிடுவோம் என பாம நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கனிமொழிக்கு பதில் அளித்துள்ளார்.
மதுவிலக்கு அமலுக்கு வந்தால் திமுகவினர், அவர்களின் உறவினர்கள் நடத்தும் மது ஆலைகள் அனைத்தும் மூடப்படும் என கருணாநிதி வாக்குறுதி அளித்துள்ளார் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் தானே மது விலக்கு அமலில் உள்ளது என்று திமுகவினர் தங்களின் மது ஆலைகளில் மது உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி- அதுவரை மது குடித்து மக்கள் செத்தால் கூட பரவாயில்லையா?... நல்ல கொள்கை!
— Dr S RAMADOSS (@drramadoss) April 19, 2016
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி - அந்த சிரமம் உங்களுக்கு தேவையில்லை, நாங்களே மூடிவிடுவோம்!
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி - அந்த சிரமம் உங்களுக்கு தேவையில்லை, நாங்களே மூடிவிடுவோம்!
— Dr S RAMADOSS (@drramadoss) April 19, 2016
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
மதுவிலக்கு வந்தவுடன் திமுக மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி- அதுவரை மது குடித்து மக்கள் செத்தால் கூட பரவாயில்லையா?... நல்ல கொள்கை!












Click it and Unblock the Notifications