தமிழக அரசின் ஆலோசகர் ஆனார் டி.ஜி.பி. ராமானுஜம்
சென்னை: சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெறும், ராமானுஜத்திற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழக அரசின் ஆலோசகர் என்ற புதிய தற்காலிக பதவி உருவாக்கப்பட்டு அதில், ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்புகளை, தமிழக தலைமைச் செயலர், மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ளார்.
ஷீலா பாலகிருஷ்ணன்
தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு, முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு செயலாளர் வெங்கட்ராமனுக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
பதவி நீட்டிப்பு
தற்போது ஓய்வு பெற்ற ராமானுஜம், ஏற்கனவே சட்டம் ஒழுங்குப் பணியில் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டார். தற்போது, அவர் ஆலோசகராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் ஆலோசகர்
ஆனால் முதல்வர் அலுவலக ஆலோசகர் என்று பதவியில் குறிப்பிடப்படாததால், அவர் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் இருந்தபடியே போலீசுக்கான ஆலோசகராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதல் நபர், ராமானுஜம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஜி.பி. நடராஜ்
முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தது நினைவிருக்கலாம்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications