தமிழக அரசின் ஆலோசகர் ஆனார் டி.ஜி.பி. ராமானுஜம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெறும், ராமானுஜத்திற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழக அரசின் ஆலோசகர் என்ற புதிய தற்காலிக பதவி உருவாக்கப்பட்டு அதில், ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்புகளை, தமிழக தலைமைச் செயலர், மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ளார்.

ஷீலா பாலகிருஷ்ணன்

தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு, முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு செயலாளர் வெங்கட்ராமனுக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

பதவி நீட்டிப்பு

தற்போது ஓய்வு பெற்ற ராமானுஜம், ஏற்கனவே சட்டம் ஒழுங்குப் பணியில் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டார். தற்போது, அவர் ஆலோசகராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் ஆலோசகர்

ஆனால் முதல்வர் அலுவலக ஆலோசகர் என்று பதவியில் குறிப்பிடப்படாததால், அவர் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் இருந்தபடியே போலீசுக்கான ஆலோசகராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதல் நபர், ராமானுஜம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஜி.பி. நடராஜ்

முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+