அகதிகளாய் வந்த 5 இலங்கைத் தமிழர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு
ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 5 தமிழர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் துவங்கியுள்ள ராணுவ கெடுபிடிகளை தாக்கு பிடிக்க முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். இதனால், இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல முயலும் தமிழர்களை, இலங்கை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.அதனால் சட்ட விரோதமான முறைகளில் உயிரை பணயம் வைத்து தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதில், பெரும் பகுதி தமிழர்கள் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளுக்கு செல்வதையே விரும்புகின்றனர். அவ்வாறு செல்ல முயல்பவர்களில் பலர் இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொள்கின்றனர். இன்னும் சிலர், இயற்கை சீற்றங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை இலங்கை முல்லை தீவு பகுதியில் இருந்து 3 ஆண்கள், 2 பெண்கள், 5 குழந்ந்தைகள் உட்பட 10 பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு அகதிகளாக வந்தனர். தமிழக போலீஸாரிடம் சரணடைந்த இவர்களிடம், நேற்று இரவு வரை மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில், அகதிகளாக வந்தவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ்சுதாகர், ரமேக்கா ஆகியோர் போலீஸார் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரையும் இம்மாதம் 19 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அகதிகள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கை அரசு தமிழ் அமைப்புகள் மீது விதித்துள்ள தடையினை இந்திய அரசு ஏற்று கொண்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி அகதிகளாக வந்தவர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாரின் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications