ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுவது எப்போது ? ஹைகோர்ட் அனுமதிக்காக காத்திருப்பு
சென்னை: புழல் சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தடைவிதித்ததை அடுத்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மற்றும் டாக்டர்கள் குழுவினர் 6 மணி நேரம் காத்திருந்து பின்னர் திரும்பிச் சென்றனர்.
ஞாயிறன்று மரணமடைந்த ராம்குமாரின் உடல் கடந்த இரண்டு தினங்களாக ராயப்பேட்டை பிணவறையில் பிரேதபரிசோதனைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ராம்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று பெற்றோரும், அரசியல் கட்சித்தலைவர்களும் கூறி வருவதால், பிரேத பரிசோதனை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ராம்குமார் மரணம்
பெண் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், 18ம்தேதி மாலை மின்வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தரப்பு கூறுகிறது. அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
பிரேத பரிசோதனை
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பெற்றோர் வராததால் திங்கட்கிழமை பிரேத பரிசோதனை செய்ய குற்றவியர் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி அனுமதிக்கவில்லை. இதனால் செவ்வாய்கிழமையன்று ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக மருத்துவமனை அருகே பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டனர்.
காத்திருந்த குழுவினர்
பிரேத பரிசோதனைக்காக மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட குழுவை சேர்ந்த டாக்டர் எஸ்.செல்வகுமார், டாக்டர் மணிகண்ட ராஜா, டாக்டர் கே.வி.வினோத், டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் நேற்று காலையிலேயே மருத்துவமனைக்கு வந்தனர். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய 2 வீடியோ கேமராமேன்களும் தயாராக இருந்தனர்.
2வது முறையாக தடை
பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பில் தனியார் மருத்துவர் ஒருவர் இருக்கவேண்டும் என்று ராம்குமார் குடும்பத்தினர் சார்பில் செவ்வாய்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று பிற்பகல் வரை நீடித்தது. இதனால் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி மற்றும் டாக்டர் குழுவினர் உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தனர். ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய மீண்டும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
அனுமதிக்காக காத்திருப்பு
இதையடுத்து சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த குற்றவியர் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி மற்றும் மருத்துவர்கள் குழுவினர் பிற்பகல் 4 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர். ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஹைகோர்ட் உத்தரவிட்டால் மட்டுமே ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications