போலி முகவரியில் சிம்கார்டு வாங்கிய ராம்குமார்... தூத்துக்குடியில் போலீஸ் துருவி துருவி விசாரணை
தூத்துக்குடி: பொறியாளர் சுவாதியை படுகொலை செய்ததாக கூறப்படும் ராம்குமார் தூத்துக்குடியில் போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசார் பிடியில் சிக்கிய போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்பு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றிய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அவரது சிம்கார்டை சோதனை செய்த போது அந்த சிம்கார்டு தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவர் பெயரில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை தனிப்படையை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று தூத்துக்குடி சண்முகபுரத்துக்கு சென்றனர்.
அப்பகுதியில் அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் சென்னை திரும்பினர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications