தீபாவளியை ஒட்டி வரும் 19ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து கூட்டுறவு நியாய விலைக் கடைகளும் வரும் 19ஆம் தேதி செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வரும் 22ம் தேதி புதன்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் தவறாது இடம் பிடித்திருக்கும். எனவே, பொதுமக்களின் வசதிக்காக தீபாவளிக்கு முன்னதாக வரும் ஞாயிற்றுக் கிழமை, கூட்டுறவு நியாய விலைக் கடைகளை திறந்து வைத்திருக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது :-
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வசதியாக, வரும் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள 32 ஆயிரம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும் செயல்படும்.
அன்றைய தினத்தில் ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். விடுப்பில் இருக்கும் பணியாளர்களும் விடுப்பை ரத்து செய்து விட்டு வேலைக்கு வரவேண்டும்' என இவ்வாறு இவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications