உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் நடத்த தயாராக இருக்கிறோம்...- மாநில தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் நடத்த தயாராக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என்றும் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், தமிழக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் ஆய்வு முடிந்து விட்டது. இடஒதுக்கீடு தொடர்பாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அரசு அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
இதில் உயர்நீதிமன்றம் தெரிவித்த அறிவுரைப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தோம். அதன்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஆவணங்கள், இறுதி வாக்காளர் பட்டியல், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்து தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பெரோஸ்கான் கூறியுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications