ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள்... தகவல்களை இருட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு?
ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் தொடர்பான தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி: ஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை ஓகி புயலாகி மாறி கன்னியாகுமரி மாவட்டத்தை உருக்குலைத்துப் போட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல்கள் இல்லை
அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர்பான தெளிவான தகவல் எதுவும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநில முதல்வர் தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவர்கள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து வருகிறார்.

எத்தனை மீனவர்கள் எங்கே?
ஆனால் தமிழக அரசு எத்தனை பேர் மீன்பிடிக்க போனார்கள்? எத்தனை பேர் எங்கெங்கே கரை ஒதுங்கியுள்ளனர்? எஞ்சிய மீனவர்கள் நிலைதான் என்ன? என்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் தெரிவிக்கவில்லை. இது மீனவர்களின் உறவினர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மீனவர் உடல்கள்
குளச்சல், விழிஞம் கடற்பரப்பில் மீனவர்களின் உடல்கள் ஒதுங்கியதாகவும் அது கேரளா மீனவர்களின் உடல்கள் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற தகவல்கள் வரும் நிலையில் தமிழக அரசு தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

அரசுக்கு கடமை உண்டு
அப்படி தெரிவிக்காததால் மீனவர்கள் நிலைமை தொடர்பான விவரங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறதோ? என்கிற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்புகின்றனர். இயற்கை சீற்றத்தில் சிக்கி உறவுகளை காணாமல் தவிப்போருக்கு தெளிவான தகவல் தந்து ஆறுதல் தர வேண்டியது தமிழக அரசின் கடமை.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications