ஆர்கே நகரில் பணம் பறக்கும் தேர்தல் நடந்தது... கரு. நாகராஜன் குற்றச்சாட்டு!
சென்னை ஆர்கே நகர் தேர்தலில் முதன்முதலாக பணம் பறக்கும் தேர்தல் நடந்ததாக பாஜக வேட்பளார் கரு. நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : ஆர்கே நகரில் திரும்பிய பக்கமெல்லாம் பணப்பட்டுவாடா நடந்ததாகவும் முதன்முறையாக பணம் பறக்கும் தேர்தல் நடந்ததாகவும் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் முதலே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தொகுதியில் வீதிவீதியாக பணப்பட்டுவாடா செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது பாஜக. வாக்குப்பதிவு தினத்தன்றும் 20 ரூபாய் நோட்டை கொடுத்து அதில் உள்ள எண்களை தெரிவிப்போருக்கு ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் பகீர் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பேட்டியளித்துள்ள பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், ஆர்.கே.நகரில் முதன் முதலாக பணம் பறக்கும் தேர்தல் நடந்தது என்றார். ஆர்.கே.நகரில் திரும்பிய பக்கமெல்லாம் பணப்பட்டுவாடா நடைபெற்றது.
Apart from BJP other parties that contested used corrupt practices and distributed money in a big way: Karu Nagarajan, BJP candidate from #RKNagar outside a vote counting center in #Chennai pic.twitter.com/4oWQyiKruz
— ANI (@ANI) December 24, 2017
ஜனநாயக முறைப்படி பாஜக மட்டுமே தேர்தலை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் பொன்னானவை என்று கரு. நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications