சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துகள் வாடிக்கையாகிவிட்டது: விஜயகாந்த்
சென்னை: கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்தும், கன்டெய்னர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்து, கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிர் இழந்துள்ளனர், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்வதுடன், காயமுற்றவர்கள் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்து, அவர்கள் வெகுவிரைவில் குணம் அடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

விபத்திற்குள்ளானதில் இன்னும் பலபேர் அடையாளம் காண முடியாத அளவிற்கு மிக மோசமான விபத்தாக நடந்திருக்கிறது என்பதை கேட்கும் போது மிகவும் வேதனையாகவுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவியும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய சிகிச்சையும், உதவித்தொகையும் வழங்க வேண்டும். ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே மேலுமலை பகுதியில் ஜூன் முதல் வாரத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரிக்கும் ஓசூருக்கும் இடையே உள்ள ஒரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உயர்ந்தவாறு செல்கிறது. இந்த இடத்தில் உயரமான தடுப்புச்சுவர்களும், மின்விளக்கும் அமைக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர். தமிழக அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று,
உடனடியாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்து, இனிமேலும் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் நடக்கா வண்ணம் கவனமுடன் செயல்பட வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications