கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றிய தலைமைக் காவலருக்கு ரூ. 1 லட்சம் பரிசு

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கிராமத்தில் மகேஸ்வரி என்ற சிறுமி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சிறுமியைக் காப்பாற்ற அவரின் உறவினர் வசந்தியும் கிணற்றில் குதித்துள்ளார்.
கிணற்றில் விழுந்த இருவரும் கூச்சல் போட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் எஸ். சுபாஷ் சீனிவாசன், தன் உயிரையும் பொருள்படுத்தாமல் கிணற்றில் குதித்து வசந்தி மற்றும் சிறுமி மகேஸ்வரி ஆகிய இருவரையும் காப்பாற்றியுள்ளார்.
இருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரின் செயல் பாராட்டுக்குரியது. அவரின் தீரச்செயலையும், தன்னலம் கருதா சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி ரூ. 1 லட்சம் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications