Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றிய தலைமைக் காவலருக்கு ரூ. 1 லட்சம் பரிசு

Subscribe to Oneindia Tamil

Rs. 1 lakh bravery award for policeman
சென்னை: கிணற்றில் விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கிராமத்தில் மகேஸ்வரி என்ற சிறுமி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சிறுமியைக் காப்பாற்ற அவரின் உறவினர் வசந்தியும் கிணற்றில் குதித்துள்ளார்.

கிணற்றில் விழுந்த இருவரும் கூச்சல் போட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் எஸ். சுபாஷ் சீனிவாசன், தன் உயிரையும் பொருள்படுத்தாமல் கிணற்றில் குதித்து வசந்தி மற்றும் சிறுமி மகேஸ்வரி ஆகிய இருவரையும் காப்பாற்றியுள்ளார்.

இருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரின் செயல் பாராட்டுக்குரியது. அவரின் தீரச்செயலையும், தன்னலம் கருதா சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி ரூ. 1 லட்சம் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+