சென்னையில் ரூ.3 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்... 2 பேரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை
சென்னை மணப்பாக்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த பரங்கிமலை போலீஸார் அவற்றை வருமான வரித் துறையின் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த பரங்கிமலை போலீஸார் அவற்றை வருமான வரித் துறையின் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் நோட்டுகளை வைத்திருந்த இருவரிடம் வருமான வரி புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது.
மணப்பாக்கத்தில் நேற்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து பரங்கிமலை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. பிடிப்பட்ட கண்ணன், கிருஷ்ணன் ஆகியோரை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த இருவரிடமும் புலனாய்வு துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications