வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம்... பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு... ஜீயர்
வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து பேசி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் மீது அவதூறு தெரிவித்ததாக வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது ஆண்டாள் குறித்த பெருமைகளை பேசினார். வெளிநாட்டவர் ஆண்டாள் குறித்து எழுதிய கருத்தை மேற்கோள் காட்டினார்.
அது ஆரம்ப காலத்தில் நல்ல நடைமுறையாக இருந்தாலும் பிற்காலத்தில் தவறான அர்த்தம் கொடுத்ததால் அந்த வார்த்தையை பயன்படுத்திய வைரமுத்துவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

கெடு விதித்த ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜரும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். வைரமுத்து நேரில் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்ணாவிரதம் கைவிடப்படும் என்றார் ஜீயர். எனினும் ஜீயர் வைரமுத்துவுக்கு கெடு விதித்துவிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஜீயர் மன்னிப்பு
இதனிடையே வைரமுத்துவை கண்டித்து ஜீயர் நடத்திய கண்டன கூட்டத்தில் இந்துக்களின் மனம் புண்படும் படி யார் செயல்பட்டாலும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்றும் ஜீயர் தெரிவித்திருந்தார். ஜீயரே இப்படி பேசலாமா என கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து தான் பேசிய பேச்சுக்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டதாக ஜீயர் தெரிவித்திருந்தார்.

வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை
விதித்த கெடுவுக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காததால் ஜீயர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி மீண்டும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்தார். ஆனால் வைரமுத்து இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை.

முடிவெடுக்கப்படும்
இதுகுறித்து சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று ஜீயர் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications