Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம்... பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு... ஜீயர்

வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து பேசி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் மீது அவதூறு தெரிவித்ததாக வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது ஆண்டாள் குறித்த பெருமைகளை பேசினார். வெளிநாட்டவர் ஆண்டாள் குறித்து எழுதிய கருத்தை மேற்கோள் காட்டினார்.

அது ஆரம்ப காலத்தில் நல்ல நடைமுறையாக இருந்தாலும் பிற்காலத்தில் தவறான அர்த்தம் கொடுத்ததால் அந்த வார்த்தையை பயன்படுத்திய வைரமுத்துவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

கெடு விதித்த ஜீயர்

கெடு விதித்த ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜரும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். வைரமுத்து நேரில் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்ணாவிரதம் கைவிடப்படும் என்றார் ஜீயர். எனினும் ஜீயர் வைரமுத்துவுக்கு கெடு விதித்துவிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஜீயர் மன்னிப்பு

ஜீயர் மன்னிப்பு

இதனிடையே வைரமுத்துவை கண்டித்து ஜீயர் நடத்திய கண்டன கூட்டத்தில் இந்துக்களின் மனம் புண்படும் படி யார் செயல்பட்டாலும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்றும் ஜீயர் தெரிவித்திருந்தார். ஜீயரே இப்படி பேசலாமா என கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து தான் பேசிய பேச்சுக்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டதாக ஜீயர் தெரிவித்திருந்தார்.

வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை

வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை

விதித்த கெடுவுக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காததால் ஜீயர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி மீண்டும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்தார். ஆனால் வைரமுத்து இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை.

முடிவெடுக்கப்படும்

முடிவெடுக்கப்படும்

இதுகுறித்து சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று ஜீயர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+