பறவைக் காவடி தூக்கி 'அம்மா'வைக் காப்பாற்ற பிடாரியம்மனிடம் வேண்டிய 'ரத்தத்தின் ரத்தங்கள்'!
சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கிலிருந்து விடுவித்து அவரை மீண்டும் முதல்வராக்கக் கோரி விதம் விதமாக டிசைன் டிசைனாக வேண்டி வருகின்றனர் அதிமுகவினர்.

இந்த வகையில் சேலத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் வித்தியாசமான காவடி தூக்கி அதிமுகவினர் அம்மாவுக்காக வேண்டிக் கொண்டனர்.

சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ எல்லைப் பிடரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பலரும் நே்த்திக் கடனுக்காக காவடி தூக்கினர்.

அதில் அதிமுகவினர் சிலரும் பங்கேற்று பறவைக் காவடி, தூக்குக் காவடி என விதம் விதமாக தூக்கி வேண்டிக் கொண்டனர்.

மேலும் திருவிழாவுக்கு வந்த பக்தர்களை வரவேற்று பிரமாண்டமான கட் அவுட்டையும் வைத்திருந்தனர் அதிமுகவினர். அதில் அம்மன் படத்துக்குப் பக்கத்தில் அம்மா படத்தையும் அம்மன் படத்துக்கு மேலே எம்.ஜி.ஆர். படத்தையும் போட்டு வைத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications