ரயில் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை.. எர்ணாகுளத்தில் போலீசார் ஆய்வு
சென்னை: சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் சுமார் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிபிஐடி போலீஸார் கடந்த 4 நாட்களாக கேரளாவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 8-ந் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயிலில் பொருத்தப்பட்டிருந்த மூன்று சரக்கு பெட்டிகளில் சுமார் ரூ.342 கோடி கொண்டு செல்லப்பட்டது. ரயில் சென்னை வந்தடைந்த பின்னர் தான் ரயில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனிறும் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் கொள்ளையர்கள் குறித்து துப்பு துலங்கவில்லை.

இதனிடையே சிபிசிஐடி அதிகாரிகள், எழும்பூர் ரயில் நிலையத்தைச் சுற்றி கடை வைத்திருக்கும் வியாபாரிகள், உணவகங்களில் உள்ள ஊழியர்கள் ஆகியோரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன்பும், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற நாளிலும் அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்ததா என போலீஸார் விசாரணை செய்தனர்.
முன்னதாக, கொள்ளைச் சம்பம் நிகழ்ந்த ரயில் பெட்டியானது பராமரிப்பு பணிகளுக்காக எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலைய யார்டில் 2 நாட்கள் இருந்தது. எனவே, இந்த கொள்ளை வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலைய யார்டுக்கு சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து வெளியே சென்ற தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications