நெருங்கும் கோடை- நல்லி வைத்த மண் ஜாடிகள் விற்பனை ஜோர்
நெல்லை: நெல்லையில் கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ள நிலையில் மண் ஜாடிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை பலமாக பெய்தது. இதுவரை இல்லாத அளவுக்கு தென் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிந்தன.

நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. ஜனவரி, பிப்ரவரியில் பனியின் தாக்கம் முன்பை விட குறைபாகவே இருந்தது. இந்த நிலையில் இப்போதே கோடையை அறிவிக்கும் வகையில் வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது.
இதனால் நாவறட்சியை போக்கும் குளிர்பானங்கள், பழங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதே போல் மண் பானைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. மண் பானையில் வெட்டி வேர் போட்டு குளிர வைத்த தண்ணீரை பருகினால் உடல் சூட்டை தணிக்கும் என்பதால் பலர் மண் பானைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதான சாலையில் உள்ள ஓரு கடையில் நல்லி பொருத்திய மண் ஜாடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை ரூபாய் 250 முதல் ரூபாய் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றையும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வெயில் இப்போதே வறுத்தெடுக்க தொடங்கியுள்ள நிலையில் மேலும் இது அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications