தமிழகத்தில் இனி அனைத்து மணல் குவாரிகளையும் அரசே நடத்தும்: எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று மாலை நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு 2 உயர்மட்ட மேம்பாலங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியாதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும். மணல் விலை குறைக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் எடுப்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் ஆற்று மணலுக்கு பதிலாக எம் ஸ்டாண்ட் மணலை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். மணல் அள்ளுவது குறைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications