சர்ச்சைக்குரிய சந்தையூர் தீண்டாமை தடுப்புச் சுவர்... இடிக்கும் பணிகள் தொடக்கம்!
மதுரை மாவட்டம் சந்தையூரில் இரு பிரிவினர் பிரச்னைக்கு காரணமான சந்தையூர் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
Recommended Video

மதுரை : மதுரை மாவட்டம் சந்தையூரில் இரு பிரிவினரின் பிரச்னைக்குக் காரணமான சந்தையூர் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. கோட்டாட்சியர் தலைமையில் சுவரின் 2 மீட்டர் அளக்கப்பட்டு இடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் இரு பிரிவு இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு பிரிவினர் தங்களின் கோவிலைச் சுற்றி தடுப்புச் சுவர் ஒன்றை கட்டிஎழுப்பியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சாதிக் கொடுமைக்கு வித்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தி மற்றொரு பிரிவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசு வழங்கிய பொது நிலத்தில் ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் கட்டிக்கொண்டு தங்களை வரவிடாமல் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்றைய தினம் இரு பிரிவு மக்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஆட்சியர் வீரராகவராவ் பொதுமக்கள் பயன்படுத்தும் அங்கன்வாடிக்கு செல்லும் பாதையை மறித்து இந்த தடுப்புச் சுவரானது கட்டப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இது கட்டப்பட்டுள்ளதால் நிச்சயமாக ஒரு பிரிவினர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது.
எனவே தீண்டாமை தடுப்புச் சுவரின் 2 மீட்டர் சுவரை இடிக்க உத்தரவிடுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இன்று காலை முதல் கோட்டாட்சியர் சுகன்யா தலைமையில் தடுப்புச் சுவரின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவுக்கு சுமார் 2 மாதங்களாக போராடி வந்த மற்றொரு பிரிவு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications