பொதுமக்களுக்கு முதல்வரின் புத்தாண்டுப் பரிசு ‘பால் கொள்முதல் விலை உயர்வு’: சரத்குமார்
சென்னை: பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், அதேசமயம் நுகர்வோர் பாதிக்கப் படாதவாறும் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 வீதம் உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

சுமார் 22½ லட்சம் பால் உற்பத்தியாளர்கள் இந்த கொள்முதல் விலை உயர்வால் மொத்தத்தில் ஓர் ஆண்டிற்கு சுமார் 274 கோடி ரூபாய் அளவிற்கு பயனடையும் வாய்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கிறார்.
இந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு பால் விலை உயர்த்தப்படமாட்டாது என்று அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த அறிவிப்பு வரும் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக பால் உற்பத்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வயிற்றில் பால் வார்ப்பதாக உள்ளது என்ற வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications