ஆர்கே நகரில் சமத்துவ மக்கள் கட்சி போட்டி : வேட்பாளர் பெயரையும் அறிவித்தார் சரத்குமார்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்துகுமார் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்துகுமார் அறிவித்துள்ளார். அந்தோணி சேவியரை வேட்பாளராக சமத்துவ மக்கள் கட்சி களம் இறக்கியுள்ளது.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் போட்டியிட உள்ளன.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இந்த தேர்தலில் களம் காண உள்ளார். இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியில் களத்தில் இறங்கியுள்ளது. ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக அந்தோணி சேவியர் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி என்பதால்
சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி சேவியர் நாளையே வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications