For Daily Alerts
Just In
தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வருக்கு சரத்குமார் நன்றி
சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் பரிசளித்த முதல்வருக்கு சமக தலைவர் சரத்குமார் நன்றி கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்த வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
இதையொட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்தவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் சாதனை படைத்த சதீஷ்குமாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
Comments
English summary
SMK leader Sarathkumar wishes to Gold medal winner Sathishkumar. And he thanked TamilNadu Chief Minister Jayalalitha.
Story first published: Tuesday, July 29, 2014, 15:17 [IST]